முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், இராணுவத்திற்கு எதிராக சாட்சிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டார்கள் இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.
இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளை தோண்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது.