பாலச்சந்திரன் மே 19 இல் படுகொலை; தடய ஆய்வில் புதிய தகவல் |
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
|
-
21 பிப்., 2013
பாலச்சந்திரனின் படுகொலைப் புகைப்படம், காணொளி குறித்து கருத்துக் கூற முடியாது நாங்கள் அந்த காணொளி மற்றும் புகைப்படங்களை பார்த்தோம். அது தொடர்பான அறிக்கையும் எமக்கு கிடைத்துள்ளது. ஆனால் அது குறித்து இப்போதைக்கு கருத்து கூற முடியாது. எ: பான் கீ மூனின் பேச்சாளர்
இலங்கை குறித்து ஐநாவின் உள்ளக குழு மூன்று அறிக்கை தயாரித்துள்ளது. இது இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்கு அல்ல. அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்
இலங்கை வீரர்கள் பங்கேற்றால் ஆசிய தடகள போட்டியை தமிழகத்தில் நடத்த விடமாட்டேன்: ஜெயலலிதா-துணிச்சலான முடிவு மதிய அரசுக்கே சவாலான நடவடிக்கை
சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால், தமிழர்களின் மனம் புண்படும் என்பதால் தமிழகத்தில் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், 20வது ஆசிய தடகள போட்டிகளை சென்னையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு தமிழகம் உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன்.
இந்த சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் சுட்டுத் தள்ளிய கோர காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவுக்கு இலங்கையில் இனப் படுகொலை நடந்து இருப்பது தெரிய வருகிறது.
இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும்.
இலங்கை வீரர்கள் 20வது ஆசிய தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரில் உள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் எழுதப்பட்டது. அதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த பதிலும், தகவலும் தமிழக அரசுக்கு வரவில்லை.
ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது என்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள 20வது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்படாது.
இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக கட்சிகள் முடிவு! நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்கள் முழக்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இன்று ஆரம்பமாகவுள்ள இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப திமுக, அதிமுக,
எச்சரிக்கை
அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை வெளியிட்டார். ஆக புலம்பெயர் தமிழர் யாராக இருந்தாலும் வெளிநாடொன்றில் குடியுரிமை பெற்று இருந்தால் அவர்கள் சொத்துக்களை இலங்கையில் வாங்க முடியாது.விரைவில் வெளிநாட்டில் உள்ளோரின் சொத்துக்களை கூட கையக படுத்தும் சட்டமூலம் வர இருப்பதாக அற்கிறோம் . வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் கனி வீடு போன்ற சொத்துகளை வாங்கவோ விற்கவோ வைத்திருக்கவோ முடியாத நிலை உருவாகும்
பிரித்தானியக் குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்து நபர் கடந்த 10ம் திகதி கொழும்பில் காணாமல் போயுள்ளார் என்று யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்தவரும் யாழ்.ஈச்சமோட்டைப் பகுதியில் வசித்தவருமான ஆறுமுகம் யோகேஸ்வரன் (வயது37) என்பவரே காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர்களால் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட தமிழ் ஆர்வலர் டி ஆர் ஜனார்த்தனம் இன்று சென்னையில் காலமானர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற அவர், அண்ணாவின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
அவருக்கு வயது 75. அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்ற அவர், அண்ணாவின் நாடகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில், தடையை மீறி அவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த போதுதான், 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் - பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் இலங்கை விடயம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதில் தமிழர்கள் தொடர்பாக பேசிக் கொள்ளப்பட்ட விரிவான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
20 பிப்., 2013
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் 50மில்லியன் டொலர் டைமன் வைரக்கற்கள் கொள்ளை
ப்ரூசெல்ஸ் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுவிஸ் எயர் பயணிகள் விமானத்திலிருந்து பெறுமதியான டைமன் வைர கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 7.47மணியளவில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய எட்டுப்பேர்
தமிழ் வளர்ச்சித் துறைக்கான இணையதளம்
தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org என்ற புதிய வலைதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
சனல்4ன்ஆவணப் படத்தின் ஒரு பகுதி தமிழில் விளக்கங்களுடன் காணொளி
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலையே என்பதை தமிழில் மொழிமாற்றி புதியதலைமுறை தொலைக்காட்சி தமிழகத்தில் ஒளிபரப்பிய காணொளி அனைவரும் இதனை பார்க்க வேண்டும் சனல் 4 ன் ஆவணப் படத்தினையே வெளியீட்டுள்ளது ….தமிழன் நிமிராத வரை இதை விட மிகப் பெரிய படுகொலைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)