புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களான த.குருகுலராசா, ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் தமக்குரிய வாக்களிப்பு நிலையங்களில் வாக்கினை செலுத்தினார்கள்..
யாழ்ப்பாணம் தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களது வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 

வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். இதன் போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார். இந்நிலையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவ்விடத்திலிருந்து செல்ல திட்டமிட்டுள்ளார். 

இரண்டு வேன்களில் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் பயணித்த வேனுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 15 - 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணடாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது. வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
யாழ்ப்பணத்தில் பொய் செய்தியை பரப்பி வரும் இலங்கை அரசின் முகவர்களான டான் டிவி கலையகம் முன்பாக மாவை சேனாதிராஜா மற்றும் அனந்தி சசிதரன் தற்போது முற்றுகை

யாழ்ப்பாணம் திக்கம் பகுதியில் மக்கள் கொளுத்தும் வெயிலுக்கும் மத்தியில் எழுச்சியுடன் வாக்களிக்க காத்து நிற்கின்றனர்..
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி
இப்போது தேர்தலில் வாக்களிக்கும் நேரம் ஆரம்பமாகி விட்டது.

ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம்

 வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு கடும் அச்சுறுத்தல்களுடனும், எச்சரிக்கைகளுடனும் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலில் தங்கள் வெற்றிகளை விட, எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும்



             பெண்கள் குளிப்பதையும், ஆடைகள் மாற்றுவதையும் காமுகர்கள் செல்ஃபோனில் படம் பிடித்து ரசிப்பதை ஏற்கனவே நக்கீரனில் எழுதி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பெண்களை உஷார்படுத்தியிருந்தோம்.
அனந்தி சசிதரன் மீது வழக்குத் தாக்கல் செய்வோம்: ஈபிடிபி
தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீதும், ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை ஆனால் அவர்மீது நாம் வழக்குத் தாக்கல் செய்வோம் என ஈபிடிபி கட்சி தெரிவித்துள்ளது.
“மாகாண சபை போதுமானதல்ல; இலக்கு ஒன்றை அடைவதற்கான வழிமுறையே” – தர்மலிங்கம் சித்தார்த்தன்

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, தனது தனிப்பட்ட அரசியல் பயணம், எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் தொடர்பாகப் புதினப்பலகையின் (நன்றி )செந்தூரன் சந்திரநாதனுடன் உரையாடினார் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன். 
[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - புளொட் அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.]
கேள்வி: தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு
 அமெ. ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை முகப்பில் ஈழப்பெண்கள் 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, "ரூ வோல்க் த ஏர்த் இன் சேவ்ரி' (To Walk the Earth in Safety) என்ற அறிக்கையின் முகப்பு அட்டையில், வடக்கு மாகாணத்தில் மிதிவெடி அகற்றும்
தற்போது வந்த செய்தி

வட மாகான சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 29-32 இடங்களை பிடிக்கும் .

எமது செய்தியாளர்களின் கருத்து கணிப்பின் படி இந்த தகவல் வந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் முன்னணியில் இருந்த விக்கினேஸ்வர்ன் அவர்களுக்கும் ஆனந்தி சசிதரனுக்கும் இடையே முதலாம் இடத்தை அடைய கடும் போட்டி நிலவுகிறது கடந்த இரவு நடைபெற்ற அனந்தி மீதான தாக்குதலுக்கு பிறகு மேலும் ஆதரவு இவருக்கு கூடும் என கணிக்கப்படுகிறது . 3 ஆம் 4 ஆம்  5 ஆம் இடங்களுக்கு கஜதீபன் ,சித்தார்த்தன்,ஐங்கரநேசன்,சிவஞானம் ஆகியோர் போட்டியில் இருப்பதாக அறிகிறோம்.மற்றும் சிவாஜிலிங்கம்  நல்ல ஆதரவை பெறக்கூடும்.கிளிநொச்சி  மாவட்டத்தில் ஆனந்த சங்கரியின் நிலைமை மோசமாக உள்ளது .இங்கே ஸ்ரீதரன் குழு அவரை தனக்கு போட்டியாக கிளிநொச்சியில் தலை எடுப்பாரோ என்ற சந்தேகத்தில் ஒதுக்கி வருவதாக அறிகிறோம்.கூட்டுக் கட்சிகள் என்ற நிலையில் இருந்து விலகி தமிழரசுக் கட்சி என்ற நிலைய ஸ்ரீதரன் எடுத்துள்ளார் .அவரது ஆதரவு வேட்பாளர்கள் வெல்வதற்கான சூழல் இருக்கிறது மன்னர் வவுனியா மாவட்டங்களில் அரச தரப்பு கடும் போட்டியில் ஈடுபடுகிறது.முல்லைத்தீவு மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் ராணுவத்தின் குளறுபடிக்கான வாய்ப்பு நிலவுகிறது .மொத்தமாக வாக்களிப்பு வீதம் கூடினால் 32 இடங்கள் வரை கூட்டமைப்பு பெறலாம்.இராணுவம் வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் வன்முறைகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது இப்போதே .ஸ்ரீதரன்.ஆனந்தி வீடுகளில் நடந்தேறி விட்டது 

142 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான 3 மாகாண சபைகளினதும் தேர்தல் இன்று

வட, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும்
வேட்பாளர் எம்.எம். ரதன் மீது தாக்குதல் முயற்சி
வட மகாண சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இலக்கம் 8ல் போட்டியிடும் எம்.எம்.ரதன் மீது தாக்குதல் நடாத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Latest News 

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் காரியாலயம் இராணுவ புலனாய்வாளர்களால் சுற்றிவளைப்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமாகிய அறிவகத்தை சுற்றி பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் அச்சுறுத்தும் வகையில் தற்பொழுது நிலைகொண்டுள்ளனர்.

20 செப்., 2013


BBC NEWS
கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஈபிடிபி மற்றும் இராணுவத்தினர்: தேர்தல் ஆணையாளருக்கு சிறீதரன் எம்பி கடிதம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இராணுவத்தினரும் ஈபிடிபி ஒட்டுக்குழுவும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக நேற்றைய தினமும் இன்றைய தினமும் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுவருவது குறித்து உடன் நடவடிக்கை
தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 

எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண  சபை தேர்தல் நடைபெறவுள்ள  நிலையில் நீங்கள்   என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய்  எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள  வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது  இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி  வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத  நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப்  பிரச்சினைஐ நா  மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி  கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை  அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத  எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான்  எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை  காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான  வீட்டுக்கு புள்ளடி  இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்  

நன்றியோடு                                                                         18.09.2013 
 ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் 
தலைமையகம் சுவிட்சர்லாந்து 
tthamil 8@gmail .com 

                                   


200 கோல் அடித்து ரூனி சாதனை
இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரும் மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் வீரருமான வெய்ன் ரூனி, மன்செஸ்டர்

ஐரோப்பிய குறுந்தூர ஓட்ட சம்பியனான டெஸான் நெய்மோவாவிற்கு ஆயுட்கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே அவருக்கு குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ad

ad