புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

 அமெ. ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை முகப்பில் ஈழப்பெண்கள் 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, "ரூ வோல்க் த ஏர்த் இன் சேவ்ரி' (To Walk the Earth in Safety) என்ற அறிக்கையின் முகப்பு அட்டையில், வடக்கு மாகாணத்தில் மிதிவெடி அகற்றும்
பணியில் ஈடுபடும் தமிழ்ப் பெண்களின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரப் பிரிவின் ஆயுதங்களை அகற்றும் பணியகத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
உலகளாவிய ரீதியில் ஆயுதங்களை அழிப்பது மற்றும் செயலிழக்கச் செய்வது தொடர்பான அமெரிக்காவின் பங்களிப்பை விபரிக்கும் இந்த அறிக்கையின் முகப்பு அட்டையில், மிதிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.
 
2012ஆம் ஆண்டில் இலங்கை உள்ளிட்ட 35 நாடுகளில் மரபு வழி ஆயுதங்களை அழிப்பதற்காக அமெரிக்கா 149 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளது. 
 
2002ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு அமெரிக்கா 35 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 4.8 மில்லியன் டொலர் இதற்காக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad