புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2013

பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ்க் கூட்டமைப்பு முடிவு! அரசாங்கம் கடும் அதிருப்தி
பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது.
பழிக்கு பழி வாங்கவே மோடி கூட்டத்தில் குண்டுவைத்தோம் : பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன.

தேனிலவுக்காக உதகை வந்த இலங்கை இளைஞர் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி பலி
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ரீகன் வயது-29, இவர், ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜான்சி எனபவருடன் கடந்த புதன்கிழமை சென்னையில் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக புதுமணத் தம்பதியினர்,
தயாளு அம்மாளிடம் விசாரணை - சாட்சியம் பதிவு
சென்னை எழும்பூர் பெரு நகர குற்றவியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி கோபாலன், கலைஞரின் கோபால புரம் இல்லத்தில் காலை 10 மணியளவில் தயாளு அம்மாளிடம் 2ஜி வழக்கில் விசாரணை மேற்கொண்டு சாட்சியத்தைப் பதிவு செய்வார்.
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், விவாதத்தின் போது திமுக உறுப்பினர் எ.வ. வேலு குறித்து, அமைச்சர் முனுசாமி கருத்துக் கூறினார்.
2வது திருமண விவகாரம் : நடிகை சரிதா புகாருக்கு நடிகர் முகேஷ் பதில்
நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக்கலைஞர் தேவிகாவை கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம்

கோவா கடற்கரையில் ராணாவுடன் சுற்றிய திரிஷா :
இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பு
 

நடிகை திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து சுற்றிய படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

27 அக்., 2013

 நடிகைக்கு உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது: நடிகருக்கு மனைவி உத்தரவு
 இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது ‘பென்சில்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மணி நாகராஜ் இயக்குகிறார். 
சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், டாக்டர்களின் தவறான அணுகுமுறையால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அடுத்த சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மோகன். தனியார் கார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23).
நாம் கூட்டுப் பங்காளிகளே தவிர, குத்தகைக்காரர்களல்ல - முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் முழுவடிவம்
அமைதியாக ஒதுங்கிய வாழ்க்கை வாழ்ந்து வந்த என்னை சிறிய கால இடைவெளிக்குள் ஒரு நாடறிந்த உலகறிந்த அரசியல்வாதியாக மாற்றிய என் அன்பார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அபிமானிகளுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். 
கொமன்வெல்த் மாநாடு குறித்து கூட்டமைப்புத் தலைவர்கள் ஆராய்வு

வடக்கு மாகாணசபை அதிகாரபூர்வமாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 
கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைக்க இடமளிக்க மாட்டோம்!- கஜதீபன
யாழ். நல்லூரில் உள்ள கிட்டுப் பூங்காவில் இராணுவ முகாம் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என வட மாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியும் அறிவு வளர்ச்சியும் முன்பள்ளி மாணவர்களிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்: வடமாகாண உறுப்பினர் 
எந்தவொரு அபிவிருத்தி என்றாலும் அறிவு வளர்ச்சி என்றாலும் அது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவை அதிகரிக்க பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரரை களமிறக்கும் தேர்தல் ஆணையம் 
இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் விளம்பரங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 
ஆந்திரா, ஒடிசாவில் 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.  

26 அக்., 2013

உலகில் பாடசாலை செல்லாத 770 இலட்சம் சிறுவர்கள்
உலகம் முழுவதிலும் சுமார் 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. மேலும் 66 மில்லியன் சிறுவர்கள் பசியுடனேயே பாடசாலை செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவேண்டும்: சென்னையில் சுதர்சன நாச்சியப்பன் பேட்டி
    இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதாரம் மேம்பட அங்கு காமன்வெல்த் மாநாடு நடைபெற வேண்டும் என்று மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். 
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் விக்னேஸ்வரனுக்கு கிடையாது! கோத்தபாய
தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் 16 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்- வீரகேசரி 
எட்டு வருடங்களாக காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். பட்டப்பகலில் நடந்து செல்வதற்குக் கூட பயமாக இருக்கிறது. எந்தக் குற்றமும் செய்யாமல் திறந்த வெளியில் சிறைபடுத்தப்பட்டது போலத்தான் எங்களது வாழ்க்கை - இது களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பகுதியில் வசிக்கும் மக்களின் சோகக்குரல்.
ஹொரணை பெருந்தோட்டக் கம்பனியின் ஹில்ஸ்ட்றீம் தோட்டத்தின் ஒரு பிரிவே அரம்பஹேன. அங்குள்ள மக்கள் காட்டுக்குள்

ad

ad