-
23 செப்., 2022
கே.பியை கைது செய்யும் போது அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்யமுடியவில்லை..! நாமல் கருணாரத்ன கேள்வி
ஜனவரியில் இடைநிறுத்தப்படுகிறது வடக்கிற்கான ரயில் சேவை
இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதன்போது ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார் |
ஜோ பைடனைச் சந்தித்தார் அலி சப்ரி!
![]() வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொது சபையின் 77 ஆவது அமர்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் வைத்தே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்துள்ளார். |
நல்லூரில் ஞாயிறன்று உண்ணாநோன்பு! - நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அழைப்பு. [Friday 2022-09-23 09:00]
![]() அனைத்து தமிழ் உறவுகளும் தியாக தீபம் திலீபனுக்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்த வேண்டும் என தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது |
22 செப்., 2022
குருந்தூர்மலை போராட்டத்தில் ஈடுபட்ட ரவிகரன், மயூரன் பொலிசாரால் கைது
![]() குருந்தூர்மலையை காணி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த ரவிகரன், மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
21 செப்., 2022
BREAKING NEWS : 200 முஸ்லீம் காடையர்கள் சேர்ந்து சைவக் கோவிலை சுற்றி வளைத்தனர்- லண்டனில் பரபரப்பு
இலங்கை நிலவரம் - உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை!
![]() இலங்கையின் தற்போதைய நிலையை சீர்செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதி கடுமையானதாக அமையும் என்று உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. |
பொறுப்புக்கூற வேண்டியவர்களை கண்டறிய தெரிவுக்குழு - 34 எம்.பிக்கள் கோரிக்கை
![]() நாடு எதிர்க்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற விசேட தெரிவு குழுவை ஸ்தாபிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, டலஸ் அழகபெரும தரப்பினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உட்பட பாராளுமன்றில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர். |
20 செப்., 2022
எங்கள் தலைவர் பிரபாகரன் ஐ. நா முன்றலில் இடிமுழக்கமாக முழங்கிகொண்டிருக்கும் தமிழர்கள்
இன்றைய தினம் (19.09.2022 ) சுவிஸ், ஜெனிவா,ஐ. நா ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த குரலோடு தங்களின் கோரிக்கையை சர்வதேசத்திடம் எழுப்பிக்கொண்டுள்ளார்கள்
19 செப்., 2022
அரசியல் தீர்வு சமஸ்டி கட்டமைப்பில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வாக இருக்க வேண்டும்!
![]() அரசியல் தீர்வு என்பது ஒரு சமஸ்டி கட்டமைப்பிலான ஒரு அதிகார பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அத்தகைய அதிகார பகிர்வையே ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
7 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த 14 வயதுச் சிறுவன்! - போதையில் தடுமாற்றம்.
![]() யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில், ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார். அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது |
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!
![]() தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் வவுனியா தமிழரசுக்கட்சி மாவட்ட அலுவலகமான தாயகத்தில், காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது |
புதிய வரைவு பிரேரணையின் உள்ளடக்கம் - தமிழ்க் கட்சிகள் அதிருப்தி!
![]() இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடைய முடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளன |
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்கு 10 பேர் பலி
![]() யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன |
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
18 செப்., 2022
![]() ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 440 உடல்கள்: கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ உக்ரைனில் ஒரே இடத்தில் 440 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இஸியம் நகரை உக்ரைன் தன் வசம் கொண்டுவந்துள்ளது. கிழக்கு நகரமான இஸியத்தில் 440க்கும் மேற்பட்ட உடல்கள் அடங்கிய பெரிய புதைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது |