பிரித்தானியாவில் லெஸ்டரில் தொடங்கிய இந்து -முஸ்லீம்கள் கை கலப்பு, தற்போது பேர்மிங்ஹாம் நகரம் வரை பரவியுள்ளது. யாரோ வெளியிட்ட பிழையாத தகவல் ஒன்றின் அடிப்படையில், சுமார் 200 முஸ்லீம் காடையர்கள் புறப்பட்டு வந்து, பேர்மிங்ஹாமில் உள்ள சவைக் கோவில் ஒன்றை சுற்றி வளைத்துள்ளார்கள். இதனால் பெரும் களோபர நிலை தோன்றியுள்ளது கலகம் அடக்கும் பொலிசார் அங்கே குவிக்கப்பட்டு வரும் நிலையில். நாடு தழுவிய ரீதியில் இந்து முஸ்லீம் கலவரம் ஒன்று வெடிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. காரணம் இடையே நின்று தூண்டி விடும் நபர்கள் தான். பேர்மிங்ஹாமில் உள்ள மசூதியை சைவர்கள் சுற்றி வளைத்து, ஒருவரை கடத்தி வைத்திருப்பதாக ..
தகவல் ஒன்று சமூக வலையத் தளத்தில் வெளியானது. இதனை நம்பிய முஸ்லீம் இளைஞர்கள் படை படையாக கிளம்பி வந்து இந்துக் கோவிலை சுற்றி வளைத்துள்ளார்கள். தற்போது பேர்மிங்ஹாம் நகரமே பெரும் பரபரப்பாக உள்ளதாக அதிர்வு இணைய வாசகர் ஒருவர், எமக்கு தெரிவித்துள்ளார். கீழே வீடியோ இணைப்பு.