கொத்மலை தேர்தல் தொகுதியில், தேசிய மக்கள் சக்திக்கான தொகுதி சபை அமைக்கும் நிகழ்வு கொத்மலை பகுதியில் நேற்று (23.09.2022) இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், அர்ஜுன் மகேந்திரன் என்பவர், சாதாரண அரச அதிகாரி. அவர் நாட்டை விட்டு தப்பியோடினார். கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன், விடுதலைப் புலிகள் அமைப்பில் பலம்பொருந்திய தலைவராக இருந்தார்.
அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியவில்லை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தப்படியாக அவரே தலைவர். இப்படிபட்ட கே.பி. உலக நாடுகளை சுற்றி வலம் வருகையில் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். கே.பியை இவ்வாறு அழைத்துவர முடியுமென்றால், அர்ஜுன் மகேந்திரனை ஏன் கைது செய்ய முடியாமல் உள்ளது?
மகேந்திரன், ரணிலின் நண்பர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல கே.பியின் கட்டளையை ஏற்று செயற்பட்ட இளைஞர்கள் சிறைகளில் உள்ளனர். கே.பியோ வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்.