புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

வவுனியாவில் வீடுவீடாக பெண்களுடன் சில்மிசம் செய்யும் அதிகாரிக்கு தர்ம அடி

வவுனியா, தரணிக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்திய வீட்டுத் திட்டங்களை கண்காணித்து வீட்டுத் திட்டத்தை உறுதிப்படுத்தும் இந்திய வீட்டுத்திட்ட உத்தியோகத்தர் இளைஞர்
அப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு விடுமுறை தினங்களிலும் அதிகாலை, மாலை வேளைகளிலும் சென்று சாப்பிட்டு விட்டு அப் பெண்களுடன் சில்மிசம் செய்துள்ளார்.
சில்மிசம் செய்த இளைஞர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை (14.02)அதிகாலை ஒரு வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது மாட்டுப்பட்டுள்ளார். பிறகு என்ன? அவருக்கு குனிய விட்டு குத்தத் தொடங்கினர் அப் பகுதி இளைஞர்கள். பயந்த அதிகாரி பொலிசாருக்கு தகவல் கொடுக்க குறித்த இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தடுப்புகாவலில் உள்ளனர்.
குறித்த கிராமப் பெண் ஒருவரும் வீட்டுத் திட்ட அதிகாரி தன்னுடன் தவறாக நடக்க முற்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார். உடனே கள்ளத் திட்டம் போட்ட அதிகாரி அந்த கிராமத்திற்கு வீட்டுத்திட்டம் தரமுடியாது எனவும் அவ்வாறு தருவதாக இருந்தால் குறித்த பெண் முறைப்பாட்டை மீள பெற்று மன்னிப்பு கோரவேண்டும் என்று கூறியுள்ளார். பிறகென்ன? வீட்டுத்திட்டம் கிடைத்த மக்கள் பெண்ணின் முறைப்பாட்டை மீளப் பெறவைத்துள்ளனர். மக்கள் மன்னிப்பும் கேட்டார்கள் 
வீட்டுத்திட்டத்தைப் பயன்படுத்தி சில்மிசம் செய்யும் அதிகாரி காட்டில் இப்போ அடைமழை. பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் மக்களை அதிகாரத்தை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பது யார்?

ad

ad