புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014


செங்கொடி, முத்துக்குமரன் ஆகியோருக்கு வீர வணக்கம்: முருகனின் தாயார் பேட்டி
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது செய்தி அறிந்ததும், அதனை வரவேற்று நளினியின் தாயார் நர்ஸ் பத்மா கூறியதாவது:-


தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், அரசியல் கட்சியினர், மாணவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. அதேபோல் அனைவரையும் விடுவிக்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முருகனின் தாயார் சோமணி கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.
தீர்ப்புகூறிய நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்கள் மற்றும் இதற்காக போராடிய அனைவருக்கும் நன்றி. மேலும் மரண தண்டனையை ஒழிக்க போராடி உயிர்நீத்த செங்கொடி, முத்துக்குமரன் ஆகியோருக்கு வீர வணக்கம்.

முருகன், நளினியின் மகள் நலன் கருதி அவர்களை விடுதலை செய்யவேண்டும். அதேபோல் அனைவரையும் விடுவிக்க முயற்சிக்க வேண்டும். தீர்ப்பை கேட்டவுடன் எனது மகன் மகிழ்ச்சியுடன் உள்ளார் என்றார்.

ad

ad