புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

தனியார் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்ட நிலையில் விடுதி ஒன்றிலிருந்து பொலிஸாரால் மீட்பு 
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் சிவபுரத்தைச் சேர்ந்த 16வயதுடைய குறித்த மாணவி தினமும் முச்சக்கர வண்டியில் தனியார் வகுப்புக்கு ஒன்றிற்கு சென்றுவந்துள்ளார்.நேற்றைய தினம் வழமையான முச்சக்கர வண்டி வருதற்கு முன்னர் இன்னோருவர் வந்து வழமையான முச்சக்கரவண்டி இன்றைய தினம் வரமுடியாது என்றும் இதனால் அவர் தன்னை அனுப்பியதாகவும் கூறி மாணவியை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றியுள்ளார்.பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வைத்து மேலும் இரண்டு நபர்கள் முச்சக்கர வண்டியில் ஏறியவுடன் மாணவியின் வாய் மற்றும் கால்களை கட்டிய நிலையில் பாசிக்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு கடத்தி சென்றுள்ளனர்.
இதற்கிடையில் மாணவியில் பெற்றோர் நீண்ட நேரம் ஆகியும் மகள் வீடு திரும்பாத நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்ற தடுப்பு பிரிவினர் கல்குடா பொலிஸாருக்கு இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளனர்.
 
குறித்த தகவல்களின் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட கல்குடா பொலிஸார் விடுதி ஒன்றில் இருந்து குறித்த மாணவியை பாதுகாப்பாக மீட்டதுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவரை கைதுசெய்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad