புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2014

நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல்களை வழங்கியுள்ளன!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு 14 அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளன.
மனித உரிமைப் பேரவையில் பிள்ளை சமர்ப்பிக்க உள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் தகவல் வழங்கியுள்ளன.
74 அம்சங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களே நவனீதம்பிள்ளைக்கு தகவல்களை வழங்கியுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நவனீதம்பிள்ளை இலங்கை விஜயம் செய்திருந்த போது இந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய எட்டு அறிக்கையை அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
தகவல்களை வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களை புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.
நவனீதம்பிள்ளை 14 மணித்தியாலங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad