திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால்நாங்கள் முழுமனதோடு வரவேற்போம் : திருமாவளவன்
கிருஷ்ணகிரிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘‘தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சில கட்சிகள் சாதி, மத வெறியை தேர்தல் பிரச்சார உத்தியாக கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் பா.ம.க. சாதி வெறியையும், தேசிய அளவில் முஸ்லிம் வெறுப்பை பா.ஜ.க.வும் கையில் எடுத்துள்ளனர். உழைக்கும் மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் இந்த மதவாத சக்திகளை தேர்தலில் புறந்தள்ள வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட பா.ம.க. திட்டமிட்டுள்ளது. எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தமிழக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டம், நத்தம் உள்பட 4 காலனிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமமாகும். ரூ.25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் வீணாகி விடும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாகும். சாதி, மதவெறி கொண்ட, சமூக நீதிக்கு எதிரான சக்திகளை எதிர்க்கும் மேலும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கிறோம்.
தே.மு.தி.க. நிச்சயம் பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சாதி, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் நாங்கள் முழுமனதோடு வரவேற்போம்’’என்று தெரிவித்தார்.
தே.மு.தி.க. நிச்சயம் பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழக அளவிலும், தேசிய அளவிலும் சாதி, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் நாங்கள் முழுமனதோடு வரவேற்போம்’’என்று தெரிவித்தார்.