புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2012

ஐ.தே.கவுடன் கூட்டணி சேர்ந்தால் கிழக்கு ஆட்சியை கைப்பற்றலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங் களையும் திருகோணமலையில் 4 ஆசனங் களையும் அம்பாறையில் இரண்டு ஆசனங் களையும் கைப்பற்ற முடியுமென நாம் நம்பு கிறோம்.

கிழக்கு மாகாண சபையில் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம் பிக்கை வெளியிட்டுள்ளார்.
திருகோண மலையில் தமிழ் அமைப்புகளின் பிரதி நிதிகளுடன் நடத்திய கலந் துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிழக்கு மாகாண சபையில் 35ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான் மையை பெறவேண்டுமானால் 17 ஆசனங் களை வெல்ல வேண்டும்.

இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன் மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும். ஐ.தே.க. 7 ஆசனங்களில் வெற்றிபெறுமே யானால் நாம் 20 ஆசனங்களை பெறமுடியும். இதன் மூலம் கிழக்கு மாகாண சபையில் பெரும்பான்மை பலம் கொண்ட ஐ.தே.க.- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சியை நிறுவலாம் ஏனைய கட்சிகளின் ஆதரவை பெற முடியும் என்று நாம் நம்ப வில்லை. அவை இலங்கை அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன. எனவே நாம் 20 ஆசனங்களை கைப்பற்றி னால் இலகுவாக முதல்வர் பதவியை பெற முடியும். அதன் மூலம் எமது பலத்தை உலகிற்குக் காட்ட முடியும். எமக்குள்ள மக்கள் ஆணையை உலகிற்கு நிரூபிக்க இது நல்ல தொரு சந்தர்ப் பம். அதற்கு உங்களின் வாக்குகளை எமக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad