புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2012

சம்பூர் பாதுகாப்பு வலயம் தொடர்பான மனு குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்கவேண்டுமென்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழு நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் சிலரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி இந்த மனுவை பரிசீலிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் அரசுதரப்பு சட்டத்தரணிக்கு கூறப்பட்டுள்ளது.

ad

ad