புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2012


தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி?

“தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், அமையலாம். தேர்தலுக்கு இன் னும் நாட்கள் உள்ள இப்போதே எல்லா வற்றையும் சொல்ல முடியுமா என்று பதிலளித்தார்.
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில்
கைது செய்யப்பட்ட தே.மு.தி.க. மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. பார்திபன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரைப் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக கட்சித் தலைவர் விஜயகாந்த் கோவை வந்தார்.
கோவை மத்திய சிறை வாசலில் நிருபர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது:- ஆயிரம் பொய் வழக்குகள் போட்டாலும் அவற்றை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். தே.மு.தி.க. வளர்ச்சி அடைந்து வருவதை கட்சியினர் மீது போடப்படும் பொய் வழக்குகள் மூலம் அறியலாம். தமிழகம் முழுவதும் ‘டெங்கு’ காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தாமல் “மர்ம காய்ச்சல்” என்று கூறி வருகின்றனர். இது குறித்து நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் பதில் சொல்ல முடிய வில்லை. தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ‘மின்வெட்டுக்கு மத்திய அரசு தான் காரணம் என கூறுவது ஏற்புடையதல்ல மக்களிடம் வாக்கு கேட்கும் போது ‘விரைவில் மின் வெட்டு தீர்க்கப்படும்’ என்று கூறித்தான், ஓட்டு கேட்டனர்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் சுமுகமாக பேசி நல்ல தீர்வு காண வேண்டும். இந்திய இறையாண்மை பாதிக்காத வகையில், மாநிலங்களிடையே உள்ள நல்லுறவு கெட்டுப்போகாத வண்ணம், அந்தத் தீர்வு இருக்க வேண்டும்.
‘அடுத்து வரும் தேர்தலில், தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமையுமா’ என நிருபர்கள் கேட்டதற்கு “அமையலாம் சார். தேர்தலுக்கு இன்னும் ரொம்ப நாட்கள் உள்ளன. இப்போதே உங்களுக்கு எல்லாத்தையும் சொல்ல முடியுமா?
என சிரித்துக் கொண்டே கூறிச் சென்றார்.

ad

ad