கனடாவில் உள்ளநபருடன், முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி-முருகன் சந்திப்பு நிறுத்தம் குறித்து, புதிய தகவல்கள்வெளியாகியுள்ளன.
கனடாவில் உள்ளநபருடன், முருகன்தொலைபேசியில்பேசியதாக வந்தமுறைப்பாடு தற்போதுஅதிக பரபரப்பைஏற்படுத்தியுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி
கொலைவழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர்மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற அவரது மனைவிநளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். தம்பதியர்இருவரும், 15 நாட்களுக்கு, ஒருமுறை சந்தித்துப் பேசிக்கொள்ள சிறைத்துறையினர் அனுமதி அளித்தனர்.
பல ஆண்டுகளாக, இவர்கள் சந்திப்பு நடந்து வந்தது. கடந்தமாதம், சிறைத்துறை விஜிலன்ஸ் பொலிஸார், வேலூர்ஆண்கள் சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது,முருகனிடமிருந்து கைத்தெலைபேசி ஒன்று, சிம்கார்ட்மற்றும் குறுந்தட்டுக்கள் இரண்டையும் கைப்பற்றினர்.இதை ஆய்வு செய்த போது, திடுக்கிடும் தகவல்கள்வெளியாகியுள்ளன.
முருகனிடமிருந்து கைப்பற்றிய, சிம்கார்டில் இருந்து,இலங்கை, கனடாவுக்கு, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு,அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி பேசியது தெரியவந்துள்ளது.மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும், சென்னை பிரமுகர் ஒருவரிடம், அடிக்கடிபேசியதும் அம்பலமாகியுள்ளது.
அதோடு கைப்பற்றிய, குறுந்தகடுகளை ஆய்வு செய்ததில்,இலங்கை உட்பட முக்கிய வரைபடங்கள் இருந்ததுதெரிந்தது. இது பற்றி மத்திய அரசு உளவுத்துறையினர்,இரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர்.
முருகனிடம் கைப்பற்றிய தொலைபேசி குறித்த விவகாரம்,டில்லியில் உள்ள “றோ” உளவுத்துறைக்குதெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முருகனைஇரகசியமாக கண்காணிக்கும்படியும், முருகன் - நளினிசந்திப்புக்கு அனுமதிக்க வேண்டாம் என்றும்உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், முருகன் - நளினி தம்பதியர் சந்திப்பு கடந்த,இரண்டு முறை நடக்கவில்லை என சிறை அதிகாரிகள்தெரிவிக்கின்றனர். இருவரையும் வேறு சிறைக்கு மாற்றஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் இந்தியஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.