புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2013


இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது
எதிர்வரும் 22வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கவனமாக ஆராய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் வரைபை, தொழில்நுட்ப உதவி கருதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகம், இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தநிலையில் நவநீதம்பிள்ளையின் அறிக்கை, எதிர்வரும் வாரத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றத்தின் பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை முன்னேற்றங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ad

ad