புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2013


விஜயகாந்த் திமுகவுடன் நெருங்கி வருவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? : கலைஞர்

ஆல் பார்ட்டியாவது..?! ஆள் இல்லாத பார்ட்டியாவது..?! என்று வழக்கமான தனது கிண்டல் தொனியில் கருணாநிதி ஆளும் மாநில அரசு குறித்து விமர்சனம் செய்தார்.


திருச்சியில் எம்.பி. சிவா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார் திமுக தலைவர் கலைஞர். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 
கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி பிரதமரை சந்தித்து காவிரி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கிறார்கள். ஆனால் இங்கே அப்படி எதுவும் இல்லையே?
"ஆல் பார்ட்டியாவது...? ஆள் இல்லாத பார்ட்டியாவது....? எல் லாம் நானே என்கிற ஆட்சியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கெல்லாம் வாய்ப்பு இல்லை”.
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வருமா?அதற்கு வாய்ப்பு இல்லை. திமுக மதவாதத்துக்கு என்றும் துணை போகாது .
விஜயகாந்த் திமுகவுடன் நெருங்கி வருவது போலத் தோற்றம் அளிக்கிறதே?
“அது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? விஜயகாந்த் என்னை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை” .
மு.க.அழகிரி குறித்துக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ?
“அழகிரி மீது ஊழல் குற்றம் சாட்டுபவர்கள் முதலில் பெங்களூர் வழக்கை முடித்துக் கொள்ளட்டும்” .
திருச்சியில் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட ராமஜெயம் கொலை வழக்கு இன்னும் துப்பு
துலக்கப்படாமல் இருக்கிறதே ?
”ராமஜெயம் கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்” 

ad

ad