புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


இவர் சிறுமியைக் கற்பழித்தால் பாவம் இல்லையாம் !


மேலே உள்ள படத்தில் இருக்கும் மத போதகர், தனது சொந்த மகளை(5 வயது) கற்பழித்துள்ளார். இதனை தாங்க முடியாத அச் சிறுமி துடிதுடித்து வைத்தியசாலையில் இறந்துள்ளார். இவரைப் பொலிசார் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தினார்கள்.
ஆனால் கடந்த சனிக்கிழமை இந் நபர் வெளியே வந்துவிட்டார். இவர் மீது தற்போது எந்தக் குற்றமும் இல்லையாம் ! தவறுதலாக செய்த குற்றத்துக்கு இலங்கையைச் சேர்ந்த ரிஷானாவுக்கு மரண தண்டனை கிடைத்தது. ஆனால் தெரிந்தே செய்த குற்றத்துக்கு, எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை என்று யோசிக்கிறீர்களா ? வாருங்கள் விடையத்துக்குச் செல்லலாம் !

சவூதி அரேபியாவின் பிரபலமான இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான சேய்க் பைஹான் அல் கம்தி தனது ஐந்து வயது மகளைக் வல்லுறவுக்குட்படுத்தி, துன்புறுத்தி கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை அவர் தான் செய்த கொலைக்கு ஈடாக குருதிப் பணத்தை தனது மனைவிக்கு செலுத்தி விட்டு அவர் செய்த கொலைக் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக சவூதியிலிருந்து கிடைத்த செய்திகள் கூறுகின்றன. அவரது விடுதலையைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. ஆனால் அன் நாட்டு அரசு அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. 

ஐந்து வயதுக் குழந்தை லாமியா அல் கம்தி, கடந்த டிசெம்பர் 25, 2011ஆம் வருடம் கடுமையான காயங்களுடன் குற்றுயிராக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சென்ற வருடம் (2012) ஒக்டோபர் 22ஆம் திகதி காலமானார். லாமியா அல் கம்தியின் தந்தையும் சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சி இஸ்லாமியப் போதகரும் மத குருவுமான செய்க் பைஹான் அல் கம்தி லாமியா அல் கம்தியின் துன்புறுத்தல்களுக்கு காரணமானவர் என்று விசாரணைகளின் மூலம் அறிந்தவுடன் சவூதி அராபிய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போதாக்குறைக்கு டி.என்.ஏ பரிசோதனைகளும் இதனை உறுதிசெய்தது. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லாமியா அல் கம்தி - வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை பரிசோதனையின் பொழுது கண்டறியப்பட்டது. அதற்குக் காரணமானவர் அவரது தந்தை என்ற விடயமும் பரிசோதனையின் பொழுது தெரியவந்தது. அது மட்டுமன்றி அவரது இடது கையில் எலும்பு முறிவும், கை விரல்களில் ஒன்றிலிருந்து ஒரு நகம் கழட்டப் பட்டும்,தலையில் மண்டையோடு உடைந்தும் இருந்திருக்கிறது. (அவ்வளவு கொடூரமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளார் இந்த ஆள்) அதிகாரிகளின் விசாரணையின்போது பைஹான் அல் கம்தி தான் தனது மகளைத் துன்புறுத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். என்றாலும், சவூதி அரேபியாவில் அமுலில் இருக்கின்ற நீதிமன்றம் அவரது கொலைக்கு பரிகாரமாக குருதிப் பணத்தை தாய்க்கு வழங்குமாறு பணித்து அவரை விடுதலை செய்துவிட்டது.

இக்கொலைக்கு நட்டஈடாக சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பைஹான் அல் கம்தி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தீர்ப்புக்கும் செய்கைக்கும் எதிராக "நான் லாமியா அல் கம்தி பேசுகிறேன்" என்ற தலைப்பில் உலகில் இருக்கின்ற பல சமூக சேவைகள் அமைப்புகள், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கின்ற அமைப்புகள் களமிறங்கியுள்ளார்கள். ஆனால் , எது எவ்வாறு இருப்பினும் சவுதி அரசாங்கத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியாது ! இது தான் இஸ்லாத்தின் நியதியா என்று வேற்றின மக்களை கேட்க்கத் தோன்றும் அளவுக்கு, சவுதி அரசாங்கம் நடந்துள்ளது வெட்கப்படவேண்டிய விடையம் ஆகும். இவர்கள் போன்றவர்கள் மனிதப் பிறப்புக்களா என்று வெட்கி நாணும் அளவுக்கு இவர் செயல் அமைந்துள்ளது. போதாக்குறைக்கு தான் விடுதலையான பின்னர், அவர் தொலைக்காட்சியில் தோன்றி, ஊருக்கு உபதேசம் வேறு செய்துள்ளார் என்றால் பாருங்களேன் !

ad

ad