புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2013


தமிழகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்!- இலங்கை
தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இலங்கையின் அரச தகவலை மேற்கோள் காட்டி இந்திய பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று பீகார் புத்தகாயாவுக்கு செல்லும் ராஜபக்ச, 8 ம் திகதியன்று ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு செல்லவுள்ளார்.
இதன்போது பீகார் மாநில முதல்வர் நித்தேஸ்குமாரை அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் தமிழகத்தில் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அட்டவணைப்படி ஜனாதிபதியின் பயணம் அமையும் என்று இலங்கை அரச தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad