மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் பேசுகிறோம் : திருச்சி சிவா
மாநிலங்களவையில் இலங்கைத்தமிழர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
அவர், ‘’இலங்கைத்தமிழர் நிலை குறித்து மீண்டும்
ரத்தம் கசியும் இதயத்துடன் பேசுகிறோம்.
இலங்கையில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை. இலங்கைத்தமிழ்ப் பெண்கள் ராணுவத்தால் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
பிரபாகரன் மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலசந்திரன் மட்டுமல்லாது ஏராளமான குழந்தைகளை கொன்றுள்ளது இலங்கை ராணுவம்.
தமிழர்களுக்கு அதிகாரம் தரப்படமாட்டாது என பகிரங்கமாக கூறியுள்ளார் ராஜபக்சே. ராஜபக்சேவின் அப்பட்டமான மறுப்புக்கு பிறகும் 13வது திருத்தம் பற்றி பேசுகிறது இந்திய அரசு. ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்புக்கம்பள வரவேற்பு தருவதை நிறுத்த வேண்டும். எத்தனையோ தீர்மானம் நிறைவேற்றியும் இலங்கையில் எந்த பயனும் ஏற்படவில்லை.
இலங்கை அரசுநியமித்த குழு நியாயமான விசாரணை நடத்தவில்லை. இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுமாறு டெசோ அமைப்பு வலியுறுத்தி வருகிறது. ஐநாவில் உலக நாடுகள் பல இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன. ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவந்திருக்க வேண்டும்’’ என்று ஆவேசமாக பேசினார்.