புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2013

உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.

இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை தமிழர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அரசு செய்து வரும் துரோகத்தை மறைத்து தமிழ் சமூகத்தை ஏன் மத்திய அரசு ஏமாற்றவேண்டும்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது. அரசை விமர்சிக்கும் இலங்கை ஊடகங்கள் தாக்கப்படுகின்றன. 

தமிழரை பாதுகாக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ் சமுகத்தை அரசு ஏன் ஏமாற்றுகிறது. 

இலங்கையில் ரத்த ஆறு ஓடுகிறது. ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட வேண்டும். 

இலங்கையில் சுதந்திரமாக தேர்தல் நடப்பதில்லை. இலங்கை தமிழர்களின் அடையாளங்கள், பாரம்பரிய உரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன என கூறினார்.

ad

ad