புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2013

40ஆயிரம் பாஜகவினர் பங்கேற்ற ஜூலை போராட்டம் - குமரி பரபரப்பு
நாடு முழுவதும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு குமரி மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு
நாகர்கோவில் நாகராஜ திடலில் ஜூலை போராட்டம் நடைபெற்றது.


இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டனர்.  நாடு முழுவதும் முஸ்லீம், கிறுஸ்தவ மாணவர்களுக்கு 8ம் வகுப்பில் இருந்து உயர்கல்வி வரை கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆனால், இன்று ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படாததை கண்டித்து கடந்த 4 ஆண்டுகளாக குமரி மாவட்ட பாஜக சார்பில் ஜூலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த நடைபெற்ற ஜூலை போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டு மற்ற அரசியல் கட்சியி னருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.   இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜூலை போராட் டத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்துகொண்ட சம்பவம் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர் வானதிசீனிவாசன், தேசிய செயலாளர் விக்டோரியா கவுரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ad

ad