புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2013

கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம்: விமல்



கூட்டமைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் வக்கிரமான ஒத்துழைப்பே அவர்கள் தனித்து போட்டியிடுவதற்குக் காரணம். இவ்வாறான பொய்யான ஒத்துழைப்பு வழங்குவது பாரிய தவறு என்பதை ஹக்கீம் உணர வேண்டும் என வீடமைப்பு, பொறியியல் கட்டுமாணம் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கூறியதாவது,
கிழக்குத் தேர்தலில்என்ன நடந்தது. ராஜபக் ஷவின் நிர்வாகம் பள்ளி வாசலை உடைக்கும் நிர்வாகம் என்று பிரசாரம் செய்து மக்களின் வாக்குகளைப்பெற்றார். இதன் பின்னர் பள்ளி உடைக்கும் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டார்.
சந்தர்ப்பவாத அரசியலைத்தான் அவர் செய்கின்றார். இதேபோல வடக்கிற்கும் சென்று அரசிற்கெதிரான பிரசாரமொன்றை முன்னெடுத்து அதிலும் எதாவது செய்ய முயற்சிப்பார்.

ad

ad