ஐக்கிய நாடுகள் சபையின் 25 ஆவது மனித உரிமை மாநாட்டில் ஈழத் தமிழருக்கான நீதி கோரி தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் 14.02.2014 அன்று ரொறன்ரோவில் இடம்பெற்றது.
மாலை 3:00 மணியளவில் British Consulate, Toronto, Bay & College St, Toronto, ON எனும் இடத்தில் ஆரம்பமான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஏராளமான மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பதாதைகளை ஏந்தியவாறு பங்கேற்றனர்.
இலங்கை மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய வந்துவிட்டது, ஐக்கியநாடுகள் சபை நீதியை நிலைநாட்ட தவறி விட்டது. போன்ற பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.