புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

10ம் வகுப்பு மாணவனை கார் ஓட்ட விட்ட பெற்றோர்; விபத்தில் குடும்பமே பலி 
திருப்பூர் நகரிலுள்ள காந்தி நகர் ஆஷர் மில் 2வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (49). இவர் திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி சிவகாமி (40). இவர்களது ஒரே மகன் செல்வவேல் (16). தாராபுரத்தில் உள்ள பள்ளியில்
செல்வவேல் பிளஸ் 1 படித்து வந்தார்.

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினம் என்பதால் மகனை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக துரைசாமியும், சிவகாமியும் காரில் வெள்ளிகிழமை மாலை திருப்பூரில் இருந்து தாராபுரத்துக்கு சென்றனர். மகனை அழைத்துக் கொண்டு அவர்கள் திருப்பூர் திரும்பிய போது, கொடுவாய் என்ற இடத்தை தாண்டியதும், வாகனப்போகுவரத்து குறையாக உள்ள சாலையில் மகன் செல்வவேலை கார் ஒட்டச்சொல்லியுள்ளனர்.
பிளஸ் 1 படிக்கும் தங்களது மகன் காரை ஓட்டியது பெற்றோருக்கு மகிழ்ச்சியாக இருந்துள்ளது. அப்போது, எதிரில் தாராபுரம் செல்வதற்காக வந்த பேருந்தை பார்த்ததும் நிலை தடுமாறிய செல்வவேல் அந்த பேருந்து மீது காரை மோதவிட்டுவிட்டார். இந்த விபத்தில், காரில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் டிரைவர் இருக்கையில் இருந்து செல்வவேல் மீட்கப்பட்டது இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விபத்து குறித்து பஸ் டிரைவர் ரரஜேந்திரன் அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ad

ad