புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 பிப்., 2014

இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும்: ஜெயலலிதா
கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையினரால் 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கடும் ராஜதந்திர ஆட்சேபம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இலங்கையின் உயர்ஸ்தானிகரை அழைத்து ஆட்சேபத்தை தெரிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமர் மன்மோகன்சிங்கிக்கு, தமிழக முதல்வர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கடும் நடவடிக்கையை தாம் எதிர்ப்பார்ப்பதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற விடயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிலைமை சீர்செய்யப்படாவிட்டால் இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad