மன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இதனை வலியுறுத்தும் முகமாக எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு மன்னார் சிவில் சமூகம் உட்பட்ட பல தரப்பினராலும் எடுக்கப்பட்டுள்ளதாக அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த மனித புதைகுழி தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்தப்படாது போனால், அது தொடர்பில் உள்ளக விசாரணையையும் எதிர்ப்பார்க்க முடியாது என்று அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.