புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2014

சோமாலியா பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி 
news
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் மீது அல் ஷபாப் இயக்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 
 
பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
 
முதலில் பாராளுமன்ற வாசல் அருகே வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் செய்த தீவிரவாதிகள், பின்னர் வாசலுக்கு வந்து பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். 
 
பின்னர் அவர்களை நோக்கி சோமாலியா படைகளும், ஆப்பிரிக்க யூனியன் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இதனால், பாராளுமன்ற வளாகத்திற்குள் கடும் சண்டை நடந்தது.
 
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட போதிலும் இரண்டு எம்.பி.க்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

ad

ad