புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2014


மேடையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் 1¼ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக
குமரி மாவட்டத்தில் முகாமிட்டு ஒன்றியம், நகரம் வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நாகர்கோவில், ஈத்தாமொழி, மைலாடி, தெரிசனங்கோப்பு, பத்மநாபபுரம், அழகியமண்டபம், வெள்ளிச்சந்தை, குலசேகரம் என நன்றி அறிவிப்பு கூட்டங்கள் நடந்த அனைத்து மேடைகளிலும் மண்டியிட்டு வணங்கி கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது கட்சியினரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது என்னுடைய வெற்றிக்காக பாடுபட்டால் உங்கள் முன் மண்டியிட்டு நன்றி தெரிவிப்பேன் என தேர்தல் பிரசாரத்தின்போது கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். அதை தற்போது நிறைவேற்றி வருகிறேன் என்றார்.

ad

ad