புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2014

பெண் புலிகளின் சடல எச்சங்கள் மீட்பு; முகமாலையில் பரபரப்பு 
முகமாலை முன்னரங்கப் பகுதியில் பெண் புலிகளின் சீருடைகள் உள்ளிட்ட எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.


முகமாலை புகையிரதக் கடவையில் இருந்து 15 மீற்றர் தூரத்திலேயே இந்த எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இந்த எச்சங்களை மீட்டுள்ளனர்.

இதன்போது பெண் புலிகளின் சீருடைகள், எலும்புக் கூடுகள், 40 எம்.பி.எம்.ஜி( நவீன ரக துப்பாக்கி)  ரவைகள் 40 ,  சலவைத்தூள் பைகள் , சில்லறைக்காசு என்பன மீட்கப்பட்டுள்ளன.

உடனடியாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு  வருகை தந்துள்ளதாகவும் நீதவானின் விசாரணைக்காக இதுவரை எச்சங்கள்  மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பகுதியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகளது பாரிய சோதனைச் சாவடி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad