புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூலை, 2014

தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் 
news
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இன்று அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
.

பிரான்ஸில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாக சர்கோசி பதிவாகியுள்ளார்.

இவர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கவோ அல்லது சிறையில் அடைக்கப்படவோ கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

59 வயதாகும் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹொலன்டேயிடம் தோல்வியைத் தழுவினார்.

மேலும் இவருக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தகவல்களை சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad