புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2014


பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர ஏனைய அதிகாரங்களை வழங்குமாறு சம்பந்தன் அரசிடம் கோரிக்கை
பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரம் தவிர்ந்த அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் மாவட்டங்களுக்கான அதிகாரங்களையும் அரசாங்கம் பரவலாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்றில் சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதி, போக்குவரத்து, காடுகள், துறைமுகம், விமான சேவைகள் உட்பட 41 அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனைகளை கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
இதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கோரியதாகவும் திவயின குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பெற்றுக்கொள்ளதற்காக தமிழ்த் தேசிய பேரவை என்ற அமைப்பை ஆரம்பிக்கவும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதனிடையே பாதுகாப்பு அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்களை வடக்கு மாகாணத்திற்கு பகிருமாறு இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

ad

ad