புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2014


விக்னேஸ்வரனின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் வாசுதேவ நாணயக்கார
ஐ.நா. சர்வதேச விசாரணை குழுவிற்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சாட்சியமளிப்பதாக கூறியிருப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணை போகும் செயலாகும். எனவே, இதனை கடுமையாக எதிர்க்கின்றேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மக்ஸ்வெல் பராக்ரம பரணகம தலைமையிலான ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெறுவதில் எவ்விதமான தப்பும் இல்லையென்றும் கூறினார்.
இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வதேச ரீதியில் எமது நாட்டை தனிமைப்படுத்தி நெருக்கடியில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இது இலங்கைக்கு எதிரான சதித்திட்டம். அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது.
அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது.
அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்தியவாதி களின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள். அப்பட்டியலிலேயே அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இதனை கடுமையாக எதிர்க்கின்றேன்.
ஜனாதிபதியினால் உள்ளூரில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம விசாரணைக்குழுவிடம் சொல்ஹெய்ம் அல்ல எவரும் சாட்சியங்களை வழங்கலாம் இதனை எதிர்க்கவில்லை.
ஏனென்றால் இக் குழு உண்மைகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நியாயமான விசாரணைகளை நடத்தும் உள்ளூர்க் குழுவாகும். இதற்கு ஆலோசனைகளை பெறுவதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டமையில் எவ்விதமான தப்பும் இல்லை.
இதன் மூலம் உள்ளூர் விசாரணைக் குழுவிற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் மேலும் வலுப்பெறும்.
இந்நிலை உருவாகும் போது எம்மை நெருக்கடியில் தள்ளிவிடும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக் குழுவின் பலம் இழக்கப்படும் நிலைமை உருவாகும் என்றார்.

ad

ad