புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 செப்., 2014

மனைவியை கட்டி போட்டு அவரது தங்கையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது
புத்தளத்தில் 14 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஒருவரை ஆனமடுவ பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
ஆனமடுவ பெரமாகுத்துவ பிரதேசத்தை சேர்ந்த நபரே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 28 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
தன்னை கட்டி போட்டு விட்டு தனது கணவர் தங்கையை பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேக நபரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் இதற்கு முன்னர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆனமடுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad