கமலேந்திரன் பிணையில் விடுதலை
யாழ்.நெடுந்தீவு
பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக
நபரான ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கமலேந்திரன்
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் புங்குடுதீவு பகுதியில் வைத்து நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது கமலேந்திரன் கைது செய்யப்பட்டிருந்தார்.