தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகளை ஒளிபரப்புவதை தடுப்பது தொடர்பாக மத்திய அரசும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உறுப்பினர்களும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த அலெக்ஸ் உள்ளிட்ட 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில், அண்மைக் காலங்களில் தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் அதிக அளவில் ஒளிபரப்புவதாகவும், இதனை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு புதன்கிழமை விசாரித்தது. அவர்கள் வழங்கிய உத்தரவில், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்வதில்லை. புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது. இரு ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனை. எனவே மத்திய அரசும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான் முடிவு செய்ய வேண்டும் என்று வழக்கை முடித்து வைத்தனர்.