சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை ஒரு வருடத்திற்குள் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பொன்றில் ஜனாதிபதி இதனை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதிலும் உள்ள தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் சுமார் 500 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் மன்னார் ஆயர் கூறியுள்ளார்.