புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2015

மகிந்தவுடன் இருந்த தமிழ் துரோகிகளை அரசில் இணைக்க வேண்டாம்! ஜனாதிபதியிடம் வலியறுத்திய கூட்டமைப்பு


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பதவி வகித்து தமிழர் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட வடக்கு, கிழக்கைச் சேர்ந்தோரை புதிய அரசில் எக்காரணம் கொண்டும் இணைத்துக் கொள்ள வேண்டாம். என ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்
நேற்று திங்கட்கிழமை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே மேற்கண்டவாறான வேண்டுகோளை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

ad

ad