புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2015

அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 5மணிநேரம் விசாரணை


மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் லஞ்ச  ஊழல்  மற்றும் மோசடி விசாரைண ஆணைக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
இவர் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், காலை 9.30 முதல் மாலை 3.30 வரை மத்திய வங்கி ஆளுநரிடம் விசாரணை தொரடந்து நடந்துள்ளது.
அர்ஜுன மகேந்திரன் சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை அவரது உறவினர் ஒருவருக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..
இது தொடர்பாக திறைசேரி முறிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சட்டமா அதிபர் காமினி பிட்டிபான தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக்குற்றச்சாட்டினை அடுத்து தற்காலிகமாக மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

ad

ad