புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

கழகங்களுக்கிடையிலான போட்டியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி


நல்லூர் பிரதேச செயலகத்தில் பதிவுசெய்யப்பட்ட கழகங்களிற்கிடையிலான விளையாட்டு விழா யாழ் இந்துக்கல்லூரி
மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
 
நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண நிதித்துறை பிரதி பிரதம செயலாளர் இ.பத்மநாதன் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.ராஜாரணசிங்க, கௌரவ விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரி அதிபர் தயானந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 

 

 
இவ் விளையாட்டு விழாவின் போது மழை குறுக்கிட்டதன் காரணமாக நிகழ்வு மிக எளிமையாக நடைபெற்றது. போட்டியின்  இறுதியில் அரியாலை ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது.

ad

ad