புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2015

நடிகை த்ரிஷா - வருண்மணியன் திருமணம் ரத்தாகிவிட்டதா?



நடிகை திரிஷாவுக்கும், தொழிலதிபரும், பட அதிபருமான வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் தனி விமானத்தில் தாஜ்மகாலுக்கு போய்வந்தார்கள். இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். திரிஷாவுக்கும், வருண் மணியனுக்கும் கடந்த ஜனவரி 23–ந்தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

வருண்மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய 2 படங்களை தயாரித்து இருக்கிறார். அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்க, திரு டைரக்ஷனில் ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டார்.

இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக திரிஷா நடிப்பதாக இருந்தார். திடீரென்று, அந்தப்படத்தில் இருந்து திரிஷா விலகிக்கொண்டார். அவருக்கு பதில் டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்த பிரச்சினையில் தான் திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகும் திரிஷா தொடர்ந்து நடிக்க விரும்புகிறார். இப்போது அவர் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, ‘போகி’ ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் புதிய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதை வருண்மணியன் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

திரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் அடுத்த வருடம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்தின் போது திரிஷா விரலில் வருண்மணியன் அணிவித்த மோதிரத்தை திரிஷா கழட்டி விட்டார் என்று தெரிகிறது. சமீபகாலமாக அவர் கைவிரலில் அந்த மோதிரம் இல்லை.

இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக பேச்சுவார்த்தையும் இல்லை. சமீபத்தில் நடந்த வருண்மணியனின் தங்கை திருமணத்துக்கு திரிஷா போகவில்லை. இந்தநிலையில் தான் திரிஷா–வருண்மணியன் திருமணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில், திரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் இடையே சமரச முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 பேருக்கும் வேண்டிய நண்பர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ad

ad