புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு...! - புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் அனுப்பிய கடிதம்!


வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளுக்கு புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது என ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினர் அனுப்பிய கடிதம் 
அவர் கடிதம் ஒன்றின் மூலம் எமக்குத் தெரிவித்த கருத்துக்கள் அப்படியே உங்களுக்காக தட்டச்சு செய்து தரப்படுகின்றது,

வட கிழக்கு எம் தாயக தமிழ் உறவுகளே!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் தெரியப்படுத்துவது,

வட கிழக்கு தாயக மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக 6 தசாப்த காலமாக அரசியல் ரீதியாகவும் அகிம்சை ரீதியாகவும் இறுதிவரை போராடிய தமிழினம் இறுதியில் மூன்றரை லட்சம் விலை மதிக்க முடியாத எமது தமிழ் உறவுகளை இறுதி யுத்தத்தில் இழந்து வேதனையில் துடித்துக் கொண்டு நிற்கின்ற வட கிழக்கு ஈழ போரில் , போரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்பு பணியில் ஈடுபடாதவரும் துப்பாக்கி ரவையினதும் எறிகணையின் வேதனை புரியாதவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை குற்றச் செயலில் இருந்து பாதுகாப்பதற்காக அவரின் தமிழ் இனத்திற்கு எதிரான சதி வலையமைப்புடன் இணைந்து ஜனநாயக போராளிகள் என்று சுயட்சை குழுவின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற வித்தியாதரன் என்பவர், விளையாட்டு கைத்துப்பாக்கியை பிடித்து சுட தெரியாதவர், இன்று மக்களையும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளையும், புலம்பெயர் உறவுகளையும் கோமாளியாக நினைத்து செயற்படுகின்றார்.

வட கிழக்கு தாயக பூமியில் எஞ்சி இருக்கின்ற தமிழினம் இன்று நிரந்தரமான அரசியல் தீர்வினை புதிய நல்லாட்சி அரசாங்கத்திடம் எதிர்பார்த்து நிற்கினற தருணத்தில் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய மக்களிற்கும், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் இயக்கத்தில் போராடிய உண்மையான போராளிகளை கேவலப்படுத்தும் வகையில் ஜனநாயக போராளிகளென்று போலியான பெயர்களை வைத்துக்கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார்.

அன்பான வட கிழக்கு தாயக மக்களுக்கு

உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் போராடி புனர்வாழ்வு பெற்ற உண்மையான போராளிகள் தெரியப்படுத்திக்கொள்வது,

வித்தியாதரன் என்பவர் - மீளவும் மகிந்த ராஜபக்ஷவுடன் இரகசியமான தொடர்பினை பேணி வருகின்றார். மீளவும் தமிழினத்திற்கு எதிராக பாரிய துரோகம் செய்வதற்காக ஜனநாயக போராளிகள் என்று முட்டாள்களை இணைத்துக்கொண்டு சுயட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். அத்தோடு உண்மையான தமிழ் தேசிய தலைவர்கள் யார் என்பதனை கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த எம் மக்களாகிய உங்களுக்கு நன்கு தெரியும். அவர்களை மீளவும் பாராளுமன்றம் செல்வதற்கும் ஜக்கிய இலங்கைக்குள் ஒற்றை ஆட்சியின் கீழ் நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான இந்த உண்மையான தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும்படி அன்புரிமையுடன் தங்களை கெளரவமாக புனர்வாழ்வு பெற்ற உண்மையான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி
இவ்வண்ணம்
சி.சசிதரன் (செவ்வாணன்)
முன்னாள் பொறுப்பாளர் 
புலனாய்வுத்துறை உள்ளக புலனாய்வு நிர்வாகம்
புலனாய்வுதுறை உள்ளகம் வன்னி கிழக்கு
புலனாய்வுதுறை உள்ளகம் வட போர்முனை புலனாய்வு
 
 
 
 

ad

ad