புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2015

இராணுவத்தைக் காப்பாற்றவே உள்ளகப் பொறிமுறை கோரல் - சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவேண்டும் என நினைப்பது மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றும் நோக்கத்தில் அல்ல. எமது இராணுவத்தையும்
நாட்டையும் காப்பாற்றவே உள்ளக பொறிமுறைகளை கோருகின்றோம்.இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுகின்றது. அதில் உண்மைத் தன்மைகளை கண்டறிய வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கைகளின் மூலம் நாட்டை மீண்டும் பழைய ஆயுதக்கலாசாரத்துக் கொண்டு செல்வதை நாம் அனுமதிக்க மாட்டோம். போர் முடிவடைந்து நாட்டில் அமைதியான சூழலொன்று உருவாகினாலும் நாட்டில் மூவின மக்களின் மனங்களையும் வென்றெடுக்க முடியாமல் போய் விட் டது.  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்துக்கான தேசிய முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மக்களின் மனங்களை வென்றெடுக்க முடியாது போனமை போன்று சர்வதேசத்தையும் தக்கவைக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு எமது உள்ளகச் செயற்பாடுகளும் எமது வெளிநாட்டுக் கொள்கையுமே காரணமாகும். 
சர்வதேச சவால்களைச் சமாளிக்க அரசால் நியமிக்கப்பட்ட நபர்களும் எமது வெளிநாட்டுக் கொள்கையும் முழுமையாக பக்கச்சார்பான, நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளாகவே அமைந்தன. வெளிவிவகார அமைச்சர் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளின் அடிமையாக செயற்பட்டார். என்றும் அவர் அதன்போது சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது:-
அதேபோன்று எமது நாட்டைச் சீரழிக்கும் வகையிலேயே மகிந்தவின் வெளிநாட்டுக் கொள்கையும் அமைந்தது. கடந்த அரசிலும் நாம் அங்கம் வகித்திருந்தோம். அதேபோல் இந்த அரசிலும் நாம் அங்கம் வகித்துச் செயற்படுகின்றோம். ஆகவே இரண்டு அரசுகளினது செயற்பாடுகளையும் எம்மால் நன்றாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மகிந்தவின் அரசில் செய்ய முடியாத அனைத்தும் இந்த அரசின் மூலம் செய்து காட்டியுள்ளோம். மூவின மக்களின் மனங்களையும் வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட் சியை அமைத்துள்ளோம். அதேபோல் சர்வதேச உறவையும் பலபடுத்தியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் ராஜதந்திர நகர்வுகள் என்பன நாட்டைச்  சரியான பாதையில் வழி நடத்துகின்றன.
இன்றும் மகிந்தவின் கொள்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் நாட்டின் நிலைமை மாறியிருக்கும். மகிந்த இன்றும் ஆட்சியில் இருந்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் செயற்பாடுகள் கடினமானதாக அமைந்திருக்கும். மகிந்த சர்வதேச நீதிமன்றின் தலையீட்டுடன் கைது செய்யப்பட்டிருப்பார். அதேபோல் இராணுவமும் குற்றவாளிகள் என ஒரு தீர்மானம் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறான சூழ்நிலையில் இருந்து நிலைமைகள் மாறியுள்ளன. அதேபோல் சர்வதேச விசாரணைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் நாம் உள்ளகப் பொறிமுறையைக் கோருவது மகிந்த ராஜபக்சவை காப்பாற்றும் நோக்கத்திலோ அல்லது அவரது செயற்பாடுகளை மூடி மறைக்கும் நோக்கத்திலோ அல்ல. எமது நாட்டையும் எமது இராணுவத்தையும் காப்பாற்றவே நாம் உள்ளகப் பொறிமுறையைக் கோருகிறோம்  என்றார்.          

ad

ad