புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

நடிகர் சங்கத் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நடிகர் சங்கத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015-18-ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை மயிலாப்பூரில் அக்டோபர் 18-ல் நடைபெறுகிறது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நடிகர் நாசர் தலைமையிலான அணியும் களம் காண உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் போட்டி நிலவி வருவதால் திரைப்பட வட்டாரம் தவிர்த்து பொதுமக்கள் மத்தியிலும் இந்தத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாவட்ட அளவில் செயல்பட்டு வரும் நாடக அமைப்புகள் மற்றும் திரைப்பட அமைப்புகளை இரு தரப்பினரும் தனித் தனியாக நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலுக்கான இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
நாசர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலர் பதவிக்கு விஷால், துணைத் தலைவர் பதவிகளுக்கு பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கோவை சரளா, பிரசன்னா, ஸ்ரீமன் உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள். சரத்குமார் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச் செயலர் பதவிக்கு ராதாரவி, துணைத் தலைவர் பதவிகளுக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நளினி உள்ளிட்டோரும் போட்டியிடுகிறார்கள்.
சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் வரும் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் தொடங்குகிறது

ad

ad