புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 அக்., 2015

பிரச்சனையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை? ராதிகா சரத்குமார் கேள்வி




தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகைகள் ராதிகா, ஊர்வசி, பூர்ணிமா, நடிகர்கள் சிம்பு, பாக்கியராஜ், மோகன் ராம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது ராதிகா கூறியதாவது, நடிகர் சங்க பிரச்சனைக்கு நடிகர்கள்தான் காரணம். நடிகர் சங்க பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். தலைகுனிவை ஏற்படுத்தும் அளவுக்கு பிரச்சனைகள் பெரிதாக வளர்ந்துள்ளன. நடிகர் சங்க பிரச்சனையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை. சர்ச்சைக்குள் வர விருமபவில்லை என்று கமல் கூறினார். விஷால் ரெட்டி அவர்களையும், கார்த்தி சிவக்குமார் ஆகிய இருவரையும் யாரோ பின்நின்று தூண்டிவிடுகிறார்கள். தேர்தலில் நிற்க வேண்டிய சூழலுக்கு சரத்குமார் அணி தள்ளப்பட்டுள்ளது. வெற்றி, தோல்வி இரண்டாவது. ஆனால் தயவு செய்து எல்லோருடைய நட்பை உடைத்துவிடாதீர்கள் என்றார்.

ad

ad