புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2015

தன்னிச்சையாக செயல்படும் வைகோ: தி.மு.க.வில் இணைந்த மாசிலாமணி குற்றச்சாட்டு


கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக ம.தி.மு.க. முன்னாள் மாநில பொருளாளர் மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ம.தி.மு.க. முன்னாள் பொருளாளர் மாசிலாமணி தமது ஆதரவாளர்கள் 2000க்கும் மேற்பட்டவர்களுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் கடிசியில் இணைந்துள்ளார்.
இதனிடையே, ம.தி.மு.க.வில் இருந்து விலகியதற்கு காரணம் தெரிவித்த மாசிலாமணி, கட்சி நிர்வாகிகள் எவருடனும் ஆலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக முடிவெடுப்பதாக குற்றம்சாட்டினார்.
துவக்கத்தில் 6 கட்சிகளுடன் மக்கள் நல கூட்டியக்கம் என்ற வைகோ பின்னர் அந்த கட்சிகளுடன் கூட்டணி எனவும் அறிவித்துள்ளார்.
ஆனால் அதில் இருந்து 2 கட்சிகள் விலகி தற்போது 4 கட்சிகள் தான் உள்ளதாகவும், அவர்களும் நீடிப்பார்களா எனபதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ad

ad