புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2015

தமது ஒப்புதலுடனேயே ரவிநாதவின் செயற்பாடு அமைந்தது!- வெளியுறவு அமைச்சு


இலங்கை தொடர்பான ஜெனீவா யோசனையின் முன்னர் இடம்பெற்ற இரண்டு உத்தியோகபற்றற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி கருத்து வெளியிட்டார் என்ற தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. 
இலங்கை தரப்பினால் போர்க்குற்ற யோசனையின் திருத்தம் தொடர்பில் முதலாவது கலந்துரையாடல் செப்டம்பர் 21ம் திகதியிலும் இரண்டாவது கலந்துரையாடல் 22ம் திகதியிலும் இடம்பெற்றன.
இந்தநிலையில் இதன்போது ரவிநாத் ஆரியசிங்க இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் கருத்து வெளியிட்டார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் இதனை மறுத்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு, தமது அமைச்சின் ஒப்புதலுக்கு அமையவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த கலந்துரையாடல்கள் இரண்டும் திறந்த நிலையில் இடம்பெற்றதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ad

ad