புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி


எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் வாகனப் பாவனையாளர்கள் வருடந்தோறும் சாலை வரியொன்றை அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும். அதனைக் கொண்டு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும்.
இதனை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் எதிர்வரும் வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக சாலை வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் தொடக்கம் இந்த வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் வாகன அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் சாலை வரியும் சேர்த்து அறவிடப்படவுள்ளது.
பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக வாக்களித்து பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் , வரி அதிகரிப்பின் மூலமாக பொதுமக்களை வாட்டி வதைக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டிக் கொண்டிருப்பது பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.

ad

ad